Posts

பக்தியின் பல வகைகள்

இன்று காசி வருகையின் இரண்டாம் நாள். தீரஜ் அவர்கள் காலை 4.30க்கு தயாராகி விடுதியின் வெளியே வந்து நிற்கச்சொன்னார். “காலை சீக்கிரம் கிளம்பி கோயில்களை தரிசனம் செய்து வந்துவிட்டால் சரியாக இருக்கும். 7 மணி ஆகிவிட்டால் கூட்டம் தாள முடியாது” என்றார். 3.00 மணிக்கு எழுந்து மறுபடியும் தேனீரைத் தேடி வெளியே வந்தேன். இரவு முழுவதும் விழித்திருந்த காசி நகரம் காலை 3 மணிக்கு அமைதியே உறுவாக இருந்தது. சிறிது தூரம் நடந்து சென்ற பின் ஒரு முதியவர் சிறிய கரி அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேனீர் கொதிக்க வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று தேனீர் கேட்டேன். “தமிழரா ?”  என்று கேட்டார். “ஆம்” என்றேன். “பில்டர் காபி இருக்கு. வேண்டுமா ?”  என்று ஹிந்தியில் கேட்டார். என் கையில் 50 ரூபாய் தான் வைத்திருந்தேன். தேனீர் 15 ரூபாய் ,  பில்டர் காபி 25 ரூபாய். மூன்று தேனீர் போதும் என்றேன். பிளாஸ்டிக் கவர் ஒன்றை எடுத்து அதில் தேனீரை ஊற்றிக் கொடுத்தார். தேனீர் குடித்து ,  குளித்து தயாராகி கிளம்பிவிட்டோம். அதே குறுகலான சந்துகள் ,  அதே ஆட்டோ ,  குண்டும் குழியுமான சாலைகளில் ஆட்டோ தூக்கி தூக்கி...

கலாச்சாரமும் ஆன்மீகமும்

Image
இன்று காலை காசி நகரைப் பார்க்க வந்து சேர்ந்தோம். காசி நகருக்கு வருவதற்கான சரியான நேரம் இது என்று புரிந்தது. வெயில் அதிகம் இல்லை, குளிரும் இல்லை, மிதமான தட்பவெப்ப நிலை. விமான நிலையத்திலிருந்து காரில் நாங்கள் இப்போது தங்கி இருக்கும் விடுதியை நோக்கி பயணித்தோம். கார் பயணம் என்னை விந்தையில் ஆழ்த்தியது. உலகத்தின் மிகப் பழமையான வாழும் நகரம் காசி. பயணம் செய்து வந்துகொண்டிருக்கும்போதே அடுக்கடுக்காக பழமை, புதுமை என்று மாறி மாறி காட்சியளித்தது. நடந்து போவதற்கும் ,  மாட்டுவண்டிகள் , குதிரை வண்டிகள் மட்டுமே செல்வதற்கும் ஏற்ற குறுகலான சாலைகள். அந்த சாலைகளுக்கு இடையே ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடி கட்டிடங்கள், மற்றும் பன்னாட்டு வணிக வளாகங்கள் என்று பழமையும் ,  அதனூடே பழமையைக் கிழித்துக்கொண்டு வெளியேறத் துடிக்கும் புதுமையும் பின்னிப்பிணைந்து காணப்பட்டன. வாகன நெரிசல் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக தெரிந்தது ,  இருசக்கர மோட்டார் வாகனங்களும் ,  கார்களும் சாலைகளில் குவிந்து நிற்க அதனிடையே சைக்கிள்களும் இருந்தன ,  அந்த சைக்கிள்களில் இளம் வயது ஆண்கள் ,  பெண்கள் மற்று...

பிரம்மாவும் புறாவும்

Image
  மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் என் மனதிற்கு அமைதியும் இதமும் அளிக்கும் இடம். கடந்த பத்து வருடங்களுக்கு மேல் வாரம் ஒரு முறையாவது செல்வது வழக்கம். சில வருடங்களுக்கு முன் ஒவ்வொரு வியாழக்கிழமையும் செல்வது வழக்கமாக இருந்தது. பிறகு வெள்ளிக்கிழமைகள் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் சனிக்கிழமைகள் செல்கிறேன். கோயில் வாயிலில் இருக்கும் பூக்கார அம்மா எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். தீபாவளி, பொங்கலுக்கு எங்கள் வீட்டில் புதுத் துணி எடுக்கும்போது கண்டிப்பாக காமாட்சிக்கும் ஒரு சேலை எடுப்பது வழக்கம். வேலை கட்டாயங்கள் அல்லது வெளியூர் பயணம் காரணமாக கோயிலுக்கு ஒரு வாரம் போகவில்லை என்றால் காமாட்சியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துவிடும். இப்படிப் பட்ட உறவுகள் ஏற்படுவது கோயில் போவதில் கிடைக்கும் கூடுதல் நன்மை.     கோயிலில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைக் கூட்டங்கள் வெவ்வேறு விதமாக இருக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு விளக்கு ஏற்றும் பக்தர்கள் அதிகம் வருவார்கள். பள்ளி ,   கல்லூரி மாணவ மாணவிகளை அதிகமாகக் காணலாம். தட்சிணாமூர்த்தி...

திருக்கழுகுன்றம் கோயில் அனுபவங்கள்

Image
செவ்வா ய் ,  வியாழன் ,  ஞாயிறு நாட்களில் திருக்கழுகுன்றம் சென்று ரூசக் மருத்துவமனையில் ஒரு வருடத்திற்கு மேலாக வேலை செய்து வருகிறேன். காலை 5.30 மணி மின் தொடர் வண்டியைப் பிடித்தால் 7.15 மணிக்கு செங்கல்பட்டு. 7.30 மணி பேருந்தைப் பிடித்தால் 8.00 மணிக்கு திருக்கழுகுன்றம். பேருந்து அந்த சிறிய டவுனுக்குள் நுழையும்போதே கம்பீரமாக கோயில் கோபுரம் காட்சியளிக்கும். அதுவரை ஏதேதோ சத்தங்கள் நிரம்பியிருந்த மனது சட்டென்று அமைதியாகிவிடும். பேருந்து ஊருக்குள் நுழைய கோபுரம் பெரியதாகிக்கொண்டே வரும். பேருந்து நிலையத்தில் வந்து பேருந்து நிற்கும்போது கோபுரம் மறைந்துவிடும். அருகாமையில் உள்ள மற்ற கட்டிடங்கள் அதை மறைத்துவிடும். ஆனாலும் தான் இருக்கிறோம் என்ற உணர்வை அந்த கோபுரம் மனதில் பதித்துவிட்டதால் ,  மனக்கண்களில் அந்த கோபுரம் தெரிந்துகொண்டே இருக்கும்.  பேருந்திலிருந்து இறங்கி ஒரு 300 அடி வேகமாக மலைச்சரிவில் நடந்து   /  ஓடிச் சென்றால் கோவில் வாயில் வந்துவிடும். கோயில் செல்லும் வழி முழுதும் மலர் மாலைகள் செய்யும் கடைகள். ரோஜா ,  சாமந்தி ,  சம்பங்கி ,  மல்லிகை ஆகிய மணங்க...

அக ஒளி பரவல்

Image
  நேற்று ரூசக் நிறுவனத்தின் சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. காலையில் 9 மணிக்கு ரூசக் நிறுவன அலுவலகத்தை அடைந்தபோது அந்த இடமே அமைதியாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் தான் அங்கு நிலவியிருந்த பரபரப்பு புலப்பட்டது. பணியாளர்கள் சிறு சிறு கூட்டங்களாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. வருடம் ஒரு முறை எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும் நாள். அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரே நிறத்தில் சேலை எடுத்துத் தரப்பட்டிருந்தது. பளபளக்கும் புதிய சேலை யும் ,  அவரவர் விருப்பதிற்கேற்ற நகை ,  ஆபரணங்களும் ,  பூவும் சூடிக்கொண்டு ,  மகிழ்ச்சியாக உரத்த குரலில் பேசிக்கோண்டும் ,  ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொண்டும் கலகலப்பாக இருந்தது.    நேரம் 10.30 இருக்கும் ,  நிகழ்ச்சி தொடங்கியது. குத்துவிளக்கேற்றி வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிகள் தொடங்க 11 ஆகிவிட்டது. முதலில் கிராமத்துப் பெண்கள் மேடை ஏறி சிறு நாடகங்கள் நடித்துக் காட்டினர். அதில் ஒரு கிராமத்தின் நாடகம் மிகச் சிறப்பாக இருந்த...

Skills passed down through ages

Image
It was a Monday morning. I was feeling very low. Nowadays Mondays mornings are invariably associated with a low mood and a sense of worthlessness. I was questioning many of my life choices. What am I doing in my life? Is the kind of medicine I am doing relevant anymore? Is there a space for community medicine in today’s world in the semi urban spaces where I practice? There is a hospital or a clinic every 500 meters in these areas. The public health system is also aggressively going door to door and bombarding people with tests, medicines, health messages, vaccines and everything else from the public health armamentarium. There is almost no elderly person in any of the areas where I practice who does not have a bag full of medications. The other day, one elderly man pulled out a box full of Tolvaptan tablets and said that he has been buying it from the pharmacy and having it regularly over the past 2 months. Tolvaptan is a sophisticated drug used for those with a hormonal condition tha...